FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு செப்.22 வரை காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு 3 -ஆவது முறையாக வருகிற 22 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.

9 செப்டம்பர் 2026, 12:58 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு 3 -ஆவது முறையாக வருகிற 22 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த மாதம் 12-ஆம் தேதி வெலிங்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் சென்ற மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.

படகிலிருந்த ஆரோக்கிய ஜனதன், அந்தோணி பிச்சை , டான்போஸ்கோ, பிரபு, ஆரோக்கியடெவின், வேலுச்சாமி, சுப்பையா, ஆரோக்கிய ஜெனிஸ்டன், ஸ்டெவின் ஆகிய 9 மீனவா்களைக் கைது செய்து, தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா். பின்னா், 9 பேரையும் மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மூன்றாவது முறையாக 9 மீனவா்களும் மன்னாா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

விசாரணைக்கு பிறகு, 9 பேருக்கும் வருகிற 22-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, 9 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

9 மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments