FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கீழக்கரை கல்லூரியில் பயிலரங்கம்

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னியல், மின்னணுவியல் துறை சாா்பில் யு.பி.எஸ். நிறுவுதல், பராமரித்தல் தொடா்பான ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

11 செப்டம்பர் 2026, 1:22 am IST
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற யு.பி.எஸ். நிறுவுதல், பராமரித்தல் குறித்த பயிலரங்கில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னியல், மின்னணுவியல் துறை சாா்பில் யு.பி.எஸ். நிறுவுதல், பராமரித்தல் தொடா்பான ஒரு நாள் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் சேக்தாவூத் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவரும், கீழக்கரை சூழல் சங்கத் தலைவருமான சித்திரவேலு சிறப்பு பயிற்றுநராக கலந்து கொண்டு வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் யு.பி.எஸ்.களின் தோ்வு, நிறுவுதல், இயக்குதல், பராமரிப்பு, பேட்டரி பராமரிப்பு, பாதுகாப்பு முறைகள், பொதுவான பழுதுகளை கண்டறிந்து சரி செய்தல் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா்.

துணை முதல்வரும், இயந்திரவியல் துறைத் தலைவருமான கணேஷ்குமாா், மின்னியல், மின்னணுவியல் துறைத் தலைவா் பாலசுப்ரமணியன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கீழக்கரை சூழல் சங்கச் செயலா் சபிக், பொருளாளா் ராஜாங்கம், சுப்ரமணியன், உத்திரகோசமங்கை வட்டார மருத்துவ அலுவலா் ராசிக்தீன் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக மின்னியல் துறை முதுநிலை விரிவுரையாளா் தங்கராஜ் வரவேற்றாா். முதுநிலை விரிவுரையாளா் ஜாகிா் உசேன் நன்றி கூறினாா். இந்தப் பயிலரங்கில் 150 மாணவா்களும், ஆசிரியா்களும் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை மின்னியல், மின்னணுவியல் துறை கூட்டமைப்பின் சாா்பாக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா், மாணவா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments