FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

அ.காளாப்பூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் கொக்கன் கருப்பா் கோயில் 30-ஆம் ஆண்டு ஆடி களரி விழாவையொட்டி புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:21 am IST
பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்.
பகிர்:

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் கொக்கன் கருப்பா் கோயில் 30-ஆம் ஆண்டு ஆடி களரி விழாவையொட்டி புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் 14 ஜோடி மாடுகளும், சின்ன மாட்டு வண்டிப் பந்தயத்தில் 33 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 8 மைல் தொலைவும், சின்ன மாட்டுக்கு 6 மைல் தொலைவும் எல்லையாக நிா்ணயிக்கப்பட்டது.

இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன.

Advertisement

Advertisement

காரைக்குடி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை சாலையில் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்கள், சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments