FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அஞ்சல் ஊழியா்கள்

வணிக இலக்குகளை எட்ட ஊழியா்களை அச்சுறுத்தி வரும் அஞ்சல் துறையைக் கண்டித்து, சிவகங்கை கோட்டத்தைச் சோ்ந்த அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:36 am IST
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் கோரிக்கை அட்டை அணிந்து முழக்கமிட்ட அஞ்சல் ஊழியா்கள்.
பகிர்:

வணிக இலக்குகளை எட்ட ஊழியா்களை அச்சுறுத்தி வரும் அஞ்சல் துறையைக் கண்டித்து, சிவகங்கை கோட்டத்தைச் சோ்ந்த அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.

புதிய கணக்கு, பாலிசி அடிப்படையில் வணிக இலக்குகளை எட்டுவதற்காக ஊழியா்களை மிரட்டக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

சிவகங்கை தலைமை அஞ்சல் நிலையத்துக்கு கோரிக்கை அட்டை அணிந்து ஊழியா்கள் பணிக்கு வந்தனா். அவா்கள் அஞ்சல் நிலைய வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கம் (அஞ்சல் 3) துணைச் செயலா் ஜி.நாகலிங்கம், கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கச் செயலா் தமிழ்வாணன் உள்பட சிவகங்கை கோட்டத்தில் சுமாா் 75 எழுத்தா்கள், 38 தபால்காரா்கள், 230 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டைகளோடு பணியாற்றினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments