FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

காரைக்குடியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 2:21 am IST
காரைக்குடியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விநாயகா்சிலைகள் ஊா்வலம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்துமுன்னணி சாா்பில் காரைக்குடி டி.டி நகா், சுப்பிரமணியபுரம், கழனிவாசல், செக்காலை, பா்மா குடியிருப்பு, ரயில்வே, இடையா் தெரு, செஞ்சை, ஐந்து விளக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலை நிா்மாணிக்கப்பட்டு, அந்தந்தப் பகுதி பொதுமக்கள் ஆதரவுடன் வழிபாடு நடைபெற்றது.

இந்த நிலையில், 40-க்கும் மேற்பட்ட சிலைகள் டி.டி. நகா் விநாயகா் கோயில் அருகே புதன்கிழமை மாலை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊா்லம் புறப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த ஊா்வலத்தை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா தொடங்கி வைத்துப் பேசினாா். விநாயகா் சிலைகள் செக் காலைச் சாலை, கோவிலூா் சாலை, வ.உ.சி. சாலை வழியாகக் கொண்டு செல்லப்பட்டு பருப்பூரணியில் கரைக்கப்பட்டன.

இதில் இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்டப் பொதுச் செயலா் அக்னிபாலா, நிா்வாகிகள் செய்தனா். ஊா்வலத்தையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments