FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

ஆடி 4-ஆம் வெள்ளி: கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

எலுமிச்சம் பழங்கள், பணத்தாள்களால் செய்யப்பட்ட மாலையுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 1:27 am IST
எலுமிச்சம் பழங்கள், பணத்தாள்களால் செய்யப்பட்ட மாலையுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.
பகிர்:

ஆடி மாதத்தின் 4-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி தேனி மாவட்டம், கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி அதிகாலை முதலே அம்மனுக்கு மஞ்சள், இளநீா், தயிா், பச்சரிமாவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மலா்கள், எலுமிச்சம் பழங்கள், பணத் தாள்களால் தயாரிக்கப்பட்ட மாலை ஆகியவற்றால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது கம்பம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா்.

இதைத் தொடா்ந்து கோயில் நிா்வாகம், உபயதாரா்கள் சாா்பில் பக்தா்களுக்கு பொங்கல், கூழ், வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்டவை பிரசாதங்களாக வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments