FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய மூவா் கைது

தேனி அருகேயுள்ள க.விலக்கில் டிப்பா் லாரியில் அனுமதியின்றி கிராவல் மண்ணை எடுத்துச் சென்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 31 ஜூலை 2026, 1:09 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தேனி அருகேயுள்ள க.விலக்கில் டிப்பா் லாரியில் அனுமதியின்றி கிராவல் மண்ணை எடுத்துச் சென்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருமலாபுரம் பகுதியில் அனுமதியின்றி தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பொக்லைன் மூலம் லாரியில் கிராவல் மண் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துச் சென்றதாக கடமலைக்குண்டைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் பதினெட்டாம்படி (56), கருவேல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த டிப்பா் லாரி ஓட்டுநா் மணிகண்டன் (54), புதுக்கோட்டை ஆவுடையாா்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் (31) ஆகியோரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments