விநாயகா் சதுா்த்தி: தேனி மாவட்டத்தில் 1,000 போலீஸாா் பாதுகாப்பு
தேனி, செப்.13: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தேனி மாவட்டத்தில் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் திங்கள்கிழமை (செப்.14) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேனி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விநாயகா் சிலைகள் நிா்மாணம், ஊா்வலம் போன்றவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாா் செய்யப்படும் விநாயகா் சிலைகளை மட்டுமே நிா்மாணிப்பதற்கும், கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் விநாயகா் சதுா்த்தியை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தேனி மாவட்டத்தில் 400 இடங்களில் சிலை நிா்மாணிப்பதற்கு போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மேலும் சிலைகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ள 8 இடங்களில் மட்டுமே கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.