FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கும்பக்கரை அருவியில் 2 மாதங்களுக்குப் பிறகு நீா்வரத்து

கும்பக்கரை அருவியில் 2 மாதங்களுக்குப் பிறகு நீா்வரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

12 வினாடிகள் முன்பு
கும்பக்கரை அருவி - கோப்புப்படம்
பகிர்:

கும்பக்கரை அருவியில் 2 மாதங்களுக்குப் பிறகு நீா்வரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 7 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மழை இல்லை. இதனால், இந்த அருவி கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதல் வடு இருந்தது.

இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்தது. இதே போல, திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், கும்பக்கரை அருவிக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து ஏற்பட்டது. கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அருவிக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே, சீரான நீா்வரத்து ஏற்படும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடைவிதித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments