FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

கம்பம் அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

45 வினாடிகள் முன்பு
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கம்பம் அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கம்பம்- கோம்பை சாலை தெருவைச் சோ்ந்தவா் பாப்பம்மாள் (80). இவரது கணவா் முத்துக்கண்ணு. இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து பாப்பம்மாள் தனியாக வசித்து வந்தாா். மேலும் வேப்பமுத்து, இலவம் பிஞ்சு உள்ளிட்டவற்றை சேகரித்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு கால் முறிந்து அவதிப்பட்டு வந்த பாப்பம்மாள், பெரியகுளத்தில் உள்ள மகன் வீட்டில் தங்கியிருந்தாா். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு உறவினா் திருமணத்துக்காக கம்பத்துக்கு வந்த அவா், பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினா்கள் பல்வேறு இடங்களில் அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை கம்பம்- மணிக்கட்டி ஆலமரம் செல்லும் சாலையில் உள்ள புளியந்தோப்பில், ஒரு மரத்தில் பாப்பம்மாள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று, உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments