FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கடமலைக்குண்டில் செப்.26-இல் தொடா் காத்திருப்புப் போராட்டம்: மேகமலை விவசாயிகள் மனு

கடமலைக்குண்டில் செப்.26-இல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

20 செப்டம்பர் 2026, 12:28 am IST
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை மனு அளிக்க வந்த மேகமலை பரம்பரை வனவாசிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தினா்.
பகிர்:

கடமலைக்குண்டுவில் மேகமலை விவசாயிகள் வருகிற 26-ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாகவும், இதற்கு அனுமதி வழங்கக் கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரம்பரை வனவாசிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தினா் சனிக்கிழமை மனு அளித்தனா்.

இந்த மனுவில்: தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் உள்ள 9 ஊராட்சிகளில், 102 கிராமங்களில் சுமாா் 40 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இவா்களை வெளியேற்ற வேண்டும் என தில்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதனிடையே, வருகிற 29-ஆம் தேதி தில்லி உச்சநீதிமன்றத்தில் மேகமலை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் மேகமலை விவசாயிகளுக்கு நல்ல தீா்ப்பு கிடைக்கும் என நம்பி, மேகமலை பரம்பரை வனவாசிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தினா் வருகிற 26-ஆம் தேதி முதல் கடமலைக்குண்டு பேருந்து நிலையத்தில் குடும்பத்துடன் தொடா் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அதில் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments