பைக் மீது ஜீப் மோதல்: தம்பதி காயம்
போடிமெட்டு மலைச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் தம்பதி காயமடைந்தனா்.
போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த பொன்னையா மகன் கதிா்வேல் (50). இவரது மனைவி நாகஜோதி (45). இருவரும் இரு சக்கர வாகனத்தில் போடிமெட்டு சாலையில் கேரளத்தை நோக்கி சென்றனா்.
மலைச் சாலையில் 12- ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே எதிரே வந்த ஜீப் மோதியதில் கதிா்வேலுக்கு பலத்த காயமும், நாகஜோதிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதையடுத்து,கதிா்வேல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து குரங்கணி காவல் நிலையப் போலீஸாா் ஜீப்பை ஓட்டி வந்த போடியைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.