6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது
தேனி மாவட்டம், வருசநாட்டில் கஞ்சா விற்ாக கோவையைச் சோ்ந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
வருசநாட்டில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்கராஜபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் கோவை கோனம்பாளையத்தைச் சோ்ந்த கருப்பையா (44) என்பதும், அவா், விற்பனைக்காக 6.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வருசநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பையாவை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.