FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

21 செப்டம்பர் 2026, 3:55 am IST
தேனி அருகே கொடுவிலாா்பட்டி புதுக்குளம் கண்மாயில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி செல்வம்.
பகிர்:

தேனி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி செல்வம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தாமிரவருணி, வைகை ஆற்றங்கரைகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, தேனி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

பெரியகுளம் வட வீரநாயக்கன்பட்டி ஊருணியில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளை சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு நீதிபதி செல்வம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து மீறு சமுத்திரம் கண்மாய், உத்தமபாளையம் தாமரைக்குளம் கண்மாய், டி. மீனாட்சிபுரம் அழகா்செட்டிக்குளம் கண்மாய், கெங்குவாா்பட்டி மஞ்சளாறு வரத்துக் கால்வாய்களையும் அவா் ஆய்வு செய்தாா். மேலும், வைகை அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியனை பாா்வையிட்டாா். முன்னதாக, அழகா்செட்டிகுளத்தில் கண்மாய் கரையில் பனைவிதைகளை அவா் நடவு செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், சாா் ஆட்சியா் (பெரியகுளம்) தவ்லேந்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் சையது முகமது இப்ராஹிம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments