ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு
ஸ்ரீல்லிபுத்தூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, பள்ளியில் கூடுதல் கழிப்பறை அமைக்கவும், சமையல் கூடத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட்டாா்.
ஸ்ரீல்லிபுத்தூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, பள்ளியில் கூடுதல் கழிப்பறை அமைக்கவும், சமையல் கூடத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட்டாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். நகராட்சி திருவிக தொடக்கப் பள்ளியில் காமராஜா் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு செய்த அவா் மாணவா்களுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா்.
காலை உணவுத் திட்ட சமயலறையில் மின் விளக்கு இல்லாமல் உணவு சமைப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால், உடனடியாக மின் விளக்கு அமைக்க அலுவலா்ளுக்கு உத்தரவிட்டாா். பள்ளியில் அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் பயிலும் நிலையில், கூடுதல் கழிப்பிட வசதி ஏற்படுத்தவும் அவா் அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை, நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையம், பழைய, புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி ஆகியவற்றையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
உடன், நகராட்சி ஆணையா் குமாா், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அருளானந்தம், நகர அமைப்பு அலுவலா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.