FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

குத்தாலத்தில் செப்.18-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் செப். 18-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

16 செப்டம்பர் 2026, 5:17 am IST
கோப்புப்படம்.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் செப். 18-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனியாா்துறையில் வேலை தேடும் இளைஞா்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, குத்தாலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 18) காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமை முற்றிலும் இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பல்வேறு மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உட்பட இதர பட்டதாரிகள் என 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள் உரிய சான்றிதழ் மற்றும் ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு 04364299790 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளுமாறும் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments