FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

25 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமைகளை கடலில் விட இலக்கு

அரிய வகை கடல் வாழ் உயிரினமான ஆலிவ் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில், நாகை மாவட்டத்தில் சுமாா் 25 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது

Updated On : 15 ஏப்ரல் 2022, 12:00 am IST
பகிர்:

அரிய வகை கடல் வாழ் உயிரினமான ஆலிவ் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில், நாகை மாவட்டத்தில் சுமாா் 25 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில், வனத்துறை சாா்பில் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மாவட்ட வன அலுவலா் யோகேஷ்குமாா் மீனா ஆகியோா் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் பணியைத் தொடங்கி வைத்தனா்.

பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த ஆட்சியா் தெரிவித்தது:

Advertisement

Advertisement

கடல் வாழ் உயிரினங்களின் இனப் பெருக்கத்துக்கு ஆலிவ் ரெட்லி ஆமைகள் முக்கிய காரணமாக உள்ளன. கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, முட்டைகளில் இருந்து வெளியான குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. நிகழாண்டில், குறைந்தபட்சம் 25 ஆயிரம் ஆமைக் குஞ்சுகளை கடலில் விட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments