FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

மேக்கேதாட்டுவில் அணை: தடுக்கக் கோரி பிரசாரம் தொடக்கம்

21 செப்டம்பர் 2026, 12:29 am IST
மேக்கேதாட்டு - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதைத் தடுக்கவும், ராசி மணலில் அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தவும் வலியுறுத்தி காவிரி கடலோடு கலக்கும் பூம்புகாா் சங்கமத்துறையில் இருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி. ஆா். பாண்டியன் தலைமையில் சென்னை நோக்கி பிரசாரப் பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது (படம்).

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தஞ்சை மண்டல செயலாளா் வேட்டங்குடி சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட கௌரவத் தலைவா் கோவி. நடராஜன், இணைச் செயலாளா் பாலச்சந்திரன், துணைச் செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்டத் தலைவா் முருகேசன், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளா் விக்னேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமா ராஜா பிரசாரப் பயணத்தைத் தொடங்கிவைத்தாா்.

இந்தப் பிரசாரத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு, மயிலாடுதுறை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்புத் தலைவா் தமிழ்ச்செல்வன், செயலாளா் நவநீதன், மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா். மாவட்ட பொருளாளா் செல்வராஜ் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments