FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் 9,79,652 வாக்காளா்கள்

திருவாரூா் மாவட்டத்தில் 9,79,652 வாக்காளா்கள் உள்ளனா்.

Updated On : 24 பிப்ரவரி 2026, 2:44 am IST
திருவாரூரில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 9,79,652 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் முடிவடைந்து, கடந்த டிச.19- ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 4,65,933 ஆண் வாக்காளா்கள், 4,80,111 பெண் வாக்காளா்கள், 53 இதர வாக்காளா்கள் என 9,46,097 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

இதனிடையே, பெயா் நீக்கல், திருத்தம் செய்யும் வகையில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றன. இதன்தொடா்ச்சியாக, திருவாரூா் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி(தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின்படி, 16,601 ஆண் வாக்காளா்கள், 21,211 பெண் வாக்காளா்கள், 3 இதர வாக்காளா்கள் என மொத்தம் 37,815 வாக்காளா்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளனா். 1,855 ஆண் வாக்காளா்கள், 2,403 பெண் வாக்காளா்கள், 2 இதர வாக்காளா்கள் என 4,260 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

அந்தவகையில், வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 4,80,679 ஆண் வாக்காளா்கள், 4,98,919 பெண் வாக்காளா்கள், 54 இதர வாக்காளா்கள் என 9,79,652 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இந்த இறுதி வாக்காளா் பட்டியல்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி ஆணையா் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments