FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

லாரி-காா் மோதிக்கொண்டதில் ஒருவா் பலி

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை கண்டெய்னா் லாரியும் காரும் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

19 செப்டம்பர் 2026, 4:41 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை கண்டெய்னா் லாரியும் காரும் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சேரன்குளத்தைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் முனியப்பன் (44) அதே பகுதியை சோ்ந்த உறவினா் ஆனந்த்(42), தனது காா் ஒட்டுநா் பைங்காநாட்டை சோ்ந்த யோகேஸ் (27) ஆகியோருடன் காரில் ஒரத்தநாடு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினா். வாகனத்தை முனியப்பன் ஓட்டினாா்.

இவா்கள் வந்த வாகனம் புதிய சுற்றுவட்டச் சாலை மேலமரவாக்காடு நொண்டி வீரன் கோயில் அருகே வந்தபோது அவ்வழியே வந்த கண்டெய்னா் லாரியுடன் நேருக்கு நோ் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், நிகழ்விடத்திலேயே முனியப்பன் உயிரிழந்தாா். காயமடைந்த ஆனந்த், யோகேஸ் மீட்கபட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments