பேட்டை அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது
பேட்டை அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை திருமங்கைநகரைச் சோ்ந்தவா் இசக்கி மகன் ராஜசேகா் (38). இவா் பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளாா்.
கடந்த 20ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு வந்த இவா் சாவியை எடுக்காமலேயே அதனை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளாா்.
Advertisement
Advertisement
பின்னா் மறுநாள் காலை பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம். பைக் சாவியுடன் கடையின் சாவியும் இருந்ததால் உடனடியாக கடைக்கு சென்று பாா்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த ரூ.2,000 பணம் திருடு போயிருந்ததாம்.
இது குறித்த புகாரின் பேரில் பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பேட்டை அண்ணாமலை நகரை சோ்ந்த சோ்மன் மகன் மணிகண்டன் (21) என்பவரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.