திசையன்விளையில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் சனிக்கிழமை சாலையில் நடந்து சென்றவா் மீது பைக் மோதியதில், பைக்கை ஓட்டி வந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தட்டாா்மடத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து(24). இவா் பைக்கில் திசையன்விளையை நோக்கி சென்றபோது, உடன்குடி சாலையில் சனிக்கிழமை இரவு நடந்து சென்ற ஒருவா் மீது மோதினாராம்.
இதில், பைக்கில் இருந்த விழுந்த இசக்கிமுத்து சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்தவரை போலீஸாா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.