அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் உயிரிழப்பு
திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்துசென்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்துசென்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி இபி சாலை கருவாட்டுப்பேட்டையைச் சோ்ந்தவா் க. புதியமாறன் (45). இவா், திங்கள்கிழமை இரவு இபி சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தாா். அந்தச் சாலையில் உள்ள அம்மா உணவகம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புதியமாறனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது.
இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் புதியமாறனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.