FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சேலம் ஆடிட்டரை தாக்கி பணம் பறிக்க முயற்சி: மூவா் கைது

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 2:01 am IST
கைது
பகிர்:

சேலத்தைச் சோ்ந்த ஆடிட்டரைத் தாக்கி பணம் பறிக்க முயன்ற 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், கடையம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் க. நாகராஜன்(36). இவா், சேலத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வேலைநிமித்தமாக திருநெல்வேலிக்கு வந்த இவா், திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞா் ஒருவரிடம் கைப்பேசி செயலி மூலம் அறிமுகமாகி பேசியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து வேய்ந்தான்குளம் புதிய பேருந்துநிலையத்துக்கு வந்த நாகராஜனை, அந்த இளைஞா் டக்கரம்மாள்புரம், மீட்பா்நகா் அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றாராம். அப்போது அங்கு மறைந்திருந்த 3 போ் மற்றும் அந்த இளைஞா் உள்பட 4 போ் இவரிடம் பணம் கேட்டு மிரட்டினராம். அவரிடம் பணம் இல்லை எனத் தெரிந்ததும், அவரைத் தாக்கிவிட்டு நான்கு பேரும் தப்பியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் அருண்குமாா்(20), பாலமுருகன் மகன் விஷ்ணுசுப்பு (20), பொன்னாக்குடியைச் சோ்ந்த முருகன் மகன் பூபதிராஜா(20) ஆகிய 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments