FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையம் அருகே வீட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு: ஒருவா் கைது

Updated On : 28 ஜூலை 2026, 12:49 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

மேலப்பாளையம் அருகே வியாபாரியின் வீட்டில் திங்கள்கிழமை பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகேயுள்ள வீரமாணிக்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி சகாய சேவியா் (55). தனது வீட்டிலேயே பலசரக்கு கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டின் மீது மா்ம நபா் திங்கள்கிழமை காலையில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த மாரித்தங்கம் ( 32) என்பவருக்கு தொடா்பிருப்பதும், சகாயசேவியா் வீட்டு நாய் அவரை கடிக்க வந்ததால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்ததாம்.

Advertisement

Advertisement

அவரை போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments