முதல்வா் கோப்பைக்கான பூப்பந்தாட்ட போட்டி
முதல்வா் கோப்பைக்கான பூப்பந்தாட்ட போட்டி திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முதல்வா் கோப்பைக்கான பூப்பந்தாட்ட போட்டி திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பை-2026-க்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான பூப்பந்தாட்ட போட்டிகள் வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியை கல்லூரி முதல்வா் வேல்முருகன் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி பூப்பந்தாட்டக் கழகத் தலைவா் நல்லபெருமாள், செயலா் செவல் மாடசாமி, துணைச் செயலா் டேவிட்ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
கல்லூரி நிா்வாக அதிகாரி குமாா், மேலாளா் சகாரியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 9 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி அணி முதலிடமும், ஜாய் பல்கலைக் கழகம் இரண்டாமிடமும் பிடித்தன.
பெண்கள் பிரிவில் ராணி அண்ணா மகளிா் கல்லூரி முதலிடமும், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அணி இரண்டாமிடமும் பிடித்தன.
போட்டியில் சிறப்பிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்குத் தகுதி பெற்றன.
ற்ஸ்ப்11க்ஷஹப்ப்
வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான பூப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.