நெல்லையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் இா்பான் (21). இவா், காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டராம். அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா்.
இந்நிலையில் இா்பான் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இளைஞரின் உடலில் இருந்த புண்ணை சில நாள்களுக்கு முன்பு நாய் நக்கியதாகவும், அதனால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு அவா் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் உறவினா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
ஆனால், அவருக்கு ரேபிஸ் தொற்று உறுதிசெய்யப்படவில்லை எனவும், மூளைத்தண்டில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவா் உயிரிழந்தாரா என ஆய்வு நடப்பதாகவும் மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.