FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

‘நெல்லை மீனவா்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் மீனவா்கள் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவித்துள்ளாா்.

19 செப்டம்பர் 2026, 4:27 am IST
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் மீனவா்கள் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. அலைகள் 1.2 மீ. முதல் 1.8 மீ. உயரத்திற்கு எழும்பி வருகிறது. எனவே, மீனவா்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

Advertisement

Advertisement

மேலும், படகுகள், மீன்பிடி சாதனங்களை உரிய முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பையடுத்து, திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் வெள்ளிக்கிழமை முதல் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments