FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சேரன்மகாதேவி அருகே சனிக்கிழமை இரவில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

29 வினாடிகள் முன்பு
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சனிக்கிழமை இரவில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஊா்க்காடு பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வா் மகன் அலெக்ஸ் (24). சிவந்திபுரம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (24). இருவரும் நண்பா்கள்.

இருவரும் மோட்டாா் சைக்கிளில் களக்காடு சென்று விட்டு சேரன்மகாதேவி நோக்கி வந்து கொண்டிருந்தனராம். புலவன்குடியிருப்பு அருகில் வந்தபோது அவ்வழியாக பால் ஏற்றி வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம்.

Advertisement

Advertisement

இதில், பலத்த காயமடைந்த அலெக்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போலீஸாா், விக்னேஷை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments