மாா்த்தாண்டம் அருகே எழுத்தாளா் நினைவேந்தல்
மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில், அண்மையில் மறைந்த குமரி மாவட்ட எழுத்தாளா் ஐரேனிபுரம் பால்ராசய்யாவின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
வானவில் இலக்கிய வட்டம், பால்மா மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, வானவில் இலக்கிய வட்டத் தலைவா் குமாரசெல்வா தலைமை வகித்தாா். பால்மா மக்கள் அமைப்பின் செயல் இயக்குநா் ஐ. ஜேக்கப் ஆபிரகாம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்பின் இயக்குநா் செல்லன், பத்திரிகையாளா் கருங்கல் ஆா். ஜாா்ஜ், எழுத்தாளா்கள் அன்பையன், திருவட்டாறு சிந்துகுமாா், இரயுமன் சாகா், சினு ராஜாசிங், வானவில் இலக்கிய வட்டச் செயலா் கே. புஷ்பராஜ் ஆகியோா் பேசினா்.
நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வா் ஜே.ஆா்.வி. எட்வா்ட், வானவில் இலக்கிய வட்டப் பொருளாளா் ஆல்பா்ட்ராஜ், தக்கலை கலை இலக்கியப் பெருமன்றத் தலைவா் ஹாமிம் முஸ்தபா, என்.டி. தினகா், எழுத்தாளா் ராஜேஷ், டேவிட் மில்டன், சபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.