FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:57 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் பஞ்சராகி நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே மாமூட்டுக்கடை, சீனிவிளை பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் குணசேகரன் (43). இவா் தனது பேரன் தக்சன், பக்கத்து வீட்டைச் சோ்ந்த 8 வயது சிறுவன் ஸ்மித் போவெல் ஆகியோரை அருகில் உள்ள சுனில் என்பவரின் வீட்டுக்கு தனிப்பயிற்சி வகுப்பில் (டியூசன்) விடுவதற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாராம்.

மாமூட்டுக்கடை பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனத்தின் டயா் பஞ்சராகி, வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குணசேகரனை, குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

மேலும், காயமடைந்த ஸ்மித் போவல், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தக்சன் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments