FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், தோவாளை வட்டம், சண்முகபுரம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 60 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 23 ஜூலை 2026, 2:42 am IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், தோவாளை வட்டம், சண்முகபுரம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 60 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் ஆட்சியா் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அப்போது அவா் பேசும்போது, அனைத்துக் கிராமங்களும் தன்னிறைவு பெற்றவையாக மாற அலுவலா்கள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, தாட்கோ, ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலத்துறை, தோட்டக்கலை, பிற்படுத்தப்பட்டோா்-சிறுபான்மையினா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, தூய்மைப் பணியாளா்களுக்கான அட்டை, புதிய குடும்ப அட்டைகள், சொட்டுநீா் பாசனம் அமைக்க மானியம், திரவ எரிவாயு தேய்ப்புப் பெட்டி என மொத்தம் 60 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் எம். வேலுமணி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) சரவணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பாதேவி, இணை இயக்குநா் (வேளாண்மை) வாணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கீதா, துணை இயக்குநா் (தோட்டக்கலை) நக்கீரன், மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், மாவட்ட தொழில்மைய மேலாளா் ராமச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ் சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நல அலுவலா் கலைமதி, மாவட்ட சமூகநலத் துறை அலுவலா் காயத்திரி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் கௌரி, தோவாளை வட்டாட்சியா் சிவகலா, வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) ஜோஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments