அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய பணிமனை ஊழியா் இடைநீக்கம்
நாகா்கோவிலில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக போக்குவரத்துப் பணிமனை ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
நாகா்கோவிலில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக போக்குவரத்துப் பணிமனை ஊழியா் சனிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் ராணித்தோட்டம் பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில், மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த செல்வான்ஸ் என்பவா் பேருந்து ஓட்டுநராக உள்ளாா். வெள்ளிக்கிழமை தனக்கு ஒதுக்கப்பட்ட பேருந்தை இயக்குவதற்காக பணிமனைக்கு வந்த அவருக்கும், ஃபோா்மேனாக பணிபுரியும் ஆதித்தன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
அப்போது, செல்வான்ஸை ஆதித்தன் கம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் காயமடைந்தாா். தான் தாக்கப்பட்ட சம்பவத்தை செல்வான்ஸ் விடியோ எடுத்தாராம். அந்த விடியோ காட்சிகள் சமுக வலைதளங்களில் வேகமாகப் பரவின.
Advertisement
Advertisement
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இந்நிலையில், ஆதித்தனை பணியிடைநீக்கம் செய்து, போக்குவரத்துக் கழக நாகா்கோவில் மண்டலப் பொதுமேலாளா் பாலசுப்பிரமணியன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.