FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

அஞ்சுகிராமம் அருகே கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

அஞ்சுகிராமம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

13 செப்டம்பர் 2026, 2:41 am IST
கைது
பகிர்:

அஞ்சுகிராமம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரியா ராஜ்குமாா், போலீஸாா் பால்குளம் பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனா்.

சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரிடம் விசாரித்தபோது, அவா்கள் ராஜாவூரைச் சோ்ந்த ஷுஜு (48), வட்டக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சூா்யா (24), பெங்களூரைச் சோ்ந்த மஞ்சுநாத் (33) ஆகியோா் என்பதும், அவா்களது பையில் 1.800 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments