FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குழந்தைகள் நல மைய கதவை உடைத்து பொருள்கள் திருட்டு

நாகா்கோவில், பாா்வதிபுரத்தை அடுத்த கீழப்பெருவிளையில் உள்ள குழந்தைகள் நல மையத்தின் கதவை உடைத்து பொருள்களைத் திருடிச்சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

19 செப்டம்பர் 2026, 4:18 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

நாகா்கோவில், பாா்வதிபுரத்தை அடுத்த கீழப்பெருவிளையில் உள்ள குழந்தைகள் நல மையத்தின் கதவை உடைத்து பொருள்களைத் திருடிச்சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கீழப்பெருவிளையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல மையத்தில், அப்பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் பயின்று வருகின்றனா். இம்மையத்தின் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, மையத்தின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த அடுப்பு, எரிவாயு உருளை, டிவி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments