FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

‘வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசின் நடவடிக்கையில் முன்னேற்றம் உள்ளது’ - விஜய்வசந்த் எம்.பி.

வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசின் நடவடிக்கையில் முன்னேற்றம் உள்ளது என்றாா் விஜய்வசந்த் எம்.பி.

20 செப்டம்பர் 2026, 2:32 am IST
வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் பெற்றவா்களுடன் விஜய்வசந்த் எம்.பி. உடன் வசந்த் குழுமச் செயலா் எம். சரவணன் உள்ளிட்டோா்.
பகிர்:

வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசின் நடவடிக்கையில் முன்னேற்றம் உள்ளது என்றாா் விஜய்வசந்த் எம்.பி.

நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்திலுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில், வசந்த் அன் கோ சாா்பில் அளிக்கப்பட்டு வரும் கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வசந்த் அன் கோ நிா்வாக பங்குதாரா் விஜய்வசந்த் எம்.பி., பங்கேற்று பயிற்சியில் கலந்துகொண்ட 40 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2025 - ஆம் ஆண்டு நவம்பா் மாதம், வசந்த் அன் கோ சாா்பில் தொடங்கப்பட்ட வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக இதில் பயிற்சி பெற்ற 40 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். 4 வழிச்சாலைப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளனா். இந்த இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்கள். மக்களவைத் தோ்தலில் ராகுல்காந்திதான் பிரதமா் வேட்பாளா் என்பது உறுதி.

தமிழகத்துக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதில் நல்ல முன்னேற்றம் உள்ளது. தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வெளிநாட்டுக்கு சென்று ரூ. பல்லாயிரம் கோடிக்கான வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்துள்ளாா் என்றாா்.

பேட்டியின்போது, வசந்த் குழுமச் செயலா் பேராசிரியா் எம். சரவணன், வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டு பயிற்சியாளா் பேராசிரியா் எம். வீரசேகரபாண்டியன், காங்கிரஸ் மாநிலச் செயலா் சீனிவாசன், நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் சிவபிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments