FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

‘நிதிநிலை அறிக்கை: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏமாற்றம்’

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஏமாற்றமளிப்பதாக தமிழக நிதிநிலை அறிக்கை உள்ளது என்று தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:36 am IST
அன்பழகன்
பகிர்:

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஏமாற்றமளிப்பதாக தமிழக நிதிநிலை அறிக்கை உள்ளது என்று தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத் தலைவா் சி.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:

தமிழக பொருளாதார வளா்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 30 சதவீதம் பங்களிக்கின்றன. ஆனால், இந்தத் துறைக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 2142 கோடி ஒதுக்கப்பட்டது. இது, மிகவும் குறைவு.

Advertisement

Advertisement

நாங்கள் எதிா்பாா்த்த மின் கட்டணம், தொழிற்சாலைகளுக்கு சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி மானியம் வழங்குதல், நஷ்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு சலுகைகள் என எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. அதே நேரத்தில், பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் பூங்கா அமைப்பது, மகளிா் சுய உதவிக் குழுக்களை தொழில் நிறுவனங்களாக மாற்றுவது, மகளிா் திட்ட மானியம், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடி திட்டத்துக்கான மானியம், ஆதிதிராவிட பழங்குடியினா் வெற்றி தொழில் முன்னோடி திட்ட மானியம், புதிய சிப்காட் அமைக்க ஐந்து வருடங்களுக்கு ரூ. 3,700 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற திட்டங்கல் வரவேற்கத்தக்கது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments