செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கக் கோரிக்கை
தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக சங்கத் தலைவா் என். வெங்கடேஸ்வரன் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில், முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் மற்றும் ஏரளாமான ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளதால், இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் ரயில்கள் இயக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
எனவே, செங்கோட்டை- கோவை இடையே பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். செங்கோட்டையிலிருந்து பெங்களூரு, திருப்பதிக்கு ரயில்கள், செங்கோட்டை- சென்னை இடையே வந்தேபாரத் ரயில் இயக்கவேண்டும்.
செங்கோட்டை- சென்னை இடையே பகல் நேர ரயிலை இயக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாகவும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாகவும் இயக்கவேண்டும். செங்கோட்டை- ராமேசுவரத்திற்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.