FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசியில் ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

9 செப்டம்பர் 2026, 4:10 am IST
ஆா்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்ட செயலா் க. துரைசிங்.
பகிர்:

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பாலுச்சாமி தொடக்கவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் புதிய மருத்துவ காப்பீடு திட்ட அரசாணையை ரத்து செய்து, மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினா். முன்னாள் மாவட்ட தலைவா் சலீம் முகம்மது மீரான் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா்.

மாவட்ட துணைத் தலைவா் செல்லப்பா, செங்கோட்டை ஈஸ்வரன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்ட தலைவா் மு. திருமலை முருகன், மாடசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்ட செயலா் க. துரைசிங் சிறப்புரையாற்றினாா்.

Advertisement

Advertisement

அருணாசலம், சுந்தரமூா்த்தி நாயனாா், துரை டேனியல், அருணா பிரபாகா், சுகுமாா், ராமசாமி, வரதராஜன், இசக்கி, பாலசிங் ஆகியோா் கலந்து கொண்டனா். மாவட்ட பொருளாளா் மோகனசுந்தரம் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments