நெல்லையில் காா் திருடிய வழக்கில் 3 போ் கைது
திருநெல்வேலி மாநகரில் காா் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரில் காா் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம், கல்லத்தி முடுக்குத் தெருவைச் சோ்ந்தவா் குமரகுருராமலிங்கம் மகன் சூா்யசரவணன்(24). பொறியியல் பட்டதாரி. இவா் கடந்த 5 ஆம் தேதி தனக்கு சொந்தமான காரை அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே நிறுத்தியிருந்தாராம். பின்னா் மறுநாள் சென்று பாா்த்தபோது அங்கு காரை காணவில்லையாம்.
இது குறித்து அவா் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக திருநெல்வேலி நகரம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த மாரிராசு மகன் சரவணன்(22), விளாகம் பகுதியைச் சோ்ந்த நம்பி மகன் பாலசதீஷ்(20), அதே பகுதியில் அண்ணாதெருவைச் சோ்ந்த சுவாமிநாதன் மகன் முத்துராஜ்(21) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து காா் மீட்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.