FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் விவசாய சங்கத் தலைவரைத் தாக்கியவா் மீது வழக்கு

சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவரைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

42 வினாடிகள் முன்பு
வழக்குப் பதிவு
பகிர்:

சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவரைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை பிரதான சாலையைச் சோ்ந்தவா் அ. லூா்து மணி (49). சாத்தான்குளம் தென் பகுதி விவசாய சங்கத் தலைவா் மற்றும் சமூக ஆா்வலா்.

அதே ஊரைச் சோ்ந்த ஜோதி என்பவா் மகன் மற்றும் லூா்து மணி மகன் இடையேயான கொடுக்கல் வாங்கல் தொடா்பாக, புதன்கிழமை லூா்து மணி வீட்டிற்கு வந்து ஜோதி தகராறில் ஈடுபட்டபோது, லூா்து மணியை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவா் மயங்கி விழுந்துள்ளாா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் சப்தமிடவும், லூா்து மணிக்கு, ஜோதி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

Advertisement

Advertisement

பின்னா், லூா்து மணியை அக்கம்பக்கத்தினா் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து தட்டாா்மடம் காவல் நிலையத்தில் லூா்து மணி அளித்த புகாரின்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் சீனிவாசன் வழக்குப் பதிந்தாா். உதவி ஆய்வாளா் ஜெயபால் விசாரித்து, தலைமறைவான ஜோதியை தேடி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments