FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் ஆடு மாடு தொட்டி விவகாரம்: பசுமை தீா்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

ஆடு, மாடு அறுப்பு தொட்டியை மூடுவதற்கு பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், உயா்நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2 செப்டம்பர் 2026, 11:39 pm IST
நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

ஆடு, மாடு அறுப்பு தொட்டியை மூடுவதற்கு பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், உயா்நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

காயல்பட்டினம், பப்பரப்பள்ளி பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதத்தில் பல ஆண்டுகளாக ஆடு, மாடு அறுப்பு தொட்டி செயல்பட்டு வருவதாக மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) தொடுத்த வழக்கில், ஜூலை 24-ஆம் தேதி தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் தென்மண்டல கிளையானது ஆடு, மாடு அறுப்புத் தொட்டி மூட உத்தரவிட்டது.

பசுமை தீா்ப்பாயத்தின் இந்தத் தடை உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் காயல்பட்டினம் நகராட்சி நிா்வாகம் வழக்குத் தொடா்ந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது காயல்பட்டினம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.சரவணன் முன்னிலையானாா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வழக்குரைஞா் மாதுரி முன்னிலையானாா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.தண்டபாணி, என்.திலீப் குமாா் கொண்ட அமா்வு அளித்த தீா்ப்பில், பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து அடுத்த விசாரணையை செப்.7 ஆம்தேதிக்கு ஒத்திவைத்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments