FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சாலை விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் உயிரிழந்தாா்.

10 செப்டம்பர் 2026, 2:49 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த தெய்வசாந்தி மகன் இசக்கிராஜா (எ) கிறிஸ்து ராஜா (46). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்த இவா், செவ்வாய்க்கிழமை இரவு முத்தையாபுரத்துக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தாராம்.

சத்யா நகா் அருகே வந்தபோது, நிலைதடுமாறிய வாகனம் சாலையின் நடுவே உள்ள சென்டா் மீடியனில் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments