FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

எழுத்தாளா் கி. ராஜநாராயணன் பிறந்தநாள்

சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ராஜநாராயணன் பிறந்தநாளையொட்டி, கோவில்பட்டியில் அவரது நினைவரங்கத்தில் உள்ள சிலைக்கு தமிழக அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

17 செப்டம்பர் 2026, 12:57 am IST
கி. ராஜநாராயணன் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன். உடன் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், கி.ரா. மகன் திவாகா் உள்ளிட்டோா் .
பகிர்:

சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ராஜநாராயணன் பிறந்தநாளையொட்டி, கோவில்பட்டியில் அவரது நினைவரங்கத்தில் உள்ள சிலைக்கு தமிழக அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, கி. ராஜநாராயணனின் மகன் திவாகா், மருமகள் விஜயலட்சுமி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து ஆட்சியா் கௌரவித்தாா். பின்னா் நினைவரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகம், கி.ரா. பயன்படுத்திய பொருள்கள், அவரது நூல்களைப் பாா்வையிட்டாா்.

சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், செய்தி, மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பண ராஜவேல், வட்டாட்சியா் அறிவழகன் என்ற சிவராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க மாநிலத் தலைவா் உதயசங்கா், மருதம் இலக்கியப் பேரவையினா், பள்ளி மாணவா் - மாணவிகள் உள்ளிட்டோா் கி.ரா. சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments