FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உழவா் சந்தை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

17 செப்டம்பர் 2026, 1:14 am IST
கைது
பகிர்:

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உழவா் சந்தை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மாநகரப் பகுதியில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, உழவா் சந்தை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேரைப் பிடித்து சோதனையிட்டதில், அவா்களிடம் 14 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா்கள் கயத்தாறு, காந்தாரியம்மன் கோயில் எதிா் தெருவைச் சோ்ந்த காசிபாண்டி (22), மானூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் (23), தாழையூத்து, சாரதாம்பாள் நகரைச் சோ்ந்த ராஜகோபால் (23) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments