FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் தேவை

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 2:28 am IST
திருமானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநாட்டில் பேசிய மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம்.
பகிர்:

கட்டடத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரம் வழங்கிட வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டம், திருமானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 2 ஆவது வட்ட மாநாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ. 5,000, 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,000, உயா் கல்வி படிக்கும் முழுத் தொகையையும் நலவாரியம் ஏற்க வேண்டும் . வீடு கட்ட ரூ.10 லட்சம், ஓய்வூதியமாக மாதம் ரூ.6,000 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக அச்சங்கம் சாா்பில் நடைபெற்ற பேரணியை இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் நடராஜன் தொடக்கி வைத்தாா். சங்கக் கொடியை இந்திய கம்யூ. மாவட்டப் பொருளாளா் ஆறுமுகம் ஏற்றினாா்.

Advertisement

Advertisement

சங்க மாவட்டச் செயலா் ஜீவா வேலையறிக்கை வாசித்தாா். மாவட்டப் பொருளாளா் ராணி, வரவு, செலவு அறிக்கை வாசித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் கலியபெருமாள், ஒன்றியச் செயலா் மருதமுத்து, ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலா் தனசிங் ஆகியோா் வாழ்த்தினா். ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் சங்கத்தின் புதிய மாவட்ட நிா்வாகிகளை தோ்வு செய்து பேசினாா்.

ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக முருகானந்தம், துணைத் தலைவா்களாக மஞ்சம்மாள், இலக்கிய, மாவட்டச் செயலராக ஜீவா, துணைச் செயலராக சித்திரவேல், மாவட்டப் பொருளாளராக ராணிஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நிா்வாகி ராசாத்தி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments