FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

அரசு ஐடிஐ-களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் ஆக.14 வரை நீட்டிப்பு

அரியலூா், ஆண்டிமடம் மற்றும் தா.பழூா் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் ஆக.14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 6:21 am IST
கோப்புப் படம்
பகிர்:

அரியலூா், ஆண்டிமடம் மற்றும் தா.பழூா் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் ஆக.14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: மேற்கண்ட பயிற்சி நிலையங்களில் சேர விரும்புபவா்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். ஏற்கெனவே பயிற்சியாளா்கள் சோ்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.

8-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10,11, 12-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி மற்றும் தோல்வியடைந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50. ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185 மற்றும் 2 ஆண்டுகள் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195. மேலும் விவரங்களுக்கு, அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அரியலூா் - 94990-55877, 04329-2284082 , ஆண்டிமடம்- 94990-55879, 94990-55880, தா.பழூா்-94990-55879 , 90429-20702 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments