தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தவெக தோ்தல் வாக்குறுதிகளின் படி விவசாயப் பயிா் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரி அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த குழுமூரிலுள்ள மணப்பத்தூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பூரா.விஸ்வநாதன் தலைமை வகித்து பேசினாா். மாவட்ட தலைவா் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினா் சின்னப்பன் உள்ளிட்டோா் கண்டன முழக்கமிட்டனா். பின்னா், அனைவரும் கூட்டுறவு சங்க அலுவலரிடம் மனு அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.