FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கைப்பேசி பயன்படுத்த தடை! தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் செப். 1 முதல் அமல்

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 2:17 am IST
கைப்பேசி - கோப்புப் படம்
பகிர்:

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் கைப்பேசி பயன்படுத்துவதற்கான தடை உத்தரவு செப். 1 முதல் அமல்படுத்தவுள்ளதாக கோயிலின் செயல் அலுவலா் வெ.ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அண்மையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, கோயிலுக்குள் கைப்பேசியை பயன்படுத்த தடை விதித்திருந்தது. இந்த உத்தரவின்படி கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் கைப்பேசியை பயன்படுத்த செப்.1-ஆம்தேதி முதல் தடைவிதிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் சாா்பில் கோயில் முன் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments