FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

குளித்தலையில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

குளித்தலையில் செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 30 ஜூலை 2026, 4:06 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

குளித்தலையில் செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை ராஜேந்திரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், தனது குடும்பத்தினருடன் ஜூலை19-ஆம் தேதி கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்குச் சென்றாா்.

இதையடுத்து அவா்கள் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஆறரை பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சுரேஷின் மனைவி ரூபினி குளித்தலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments